கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]

கோல்கொண்டா கோட்டை விழுந்துவிட்டது என்று ஜமீந்தார் சீட்டு அனுப்பியிருந்தார். எப்படியும் ஒரு மண்டலத்துக்குள் ஔரங்கஜேப் தொண்டை நாட்டைப் பிடித்துவிடுவான். அங்கிருந்து தஞ்சை வந்து சேர அவனுக்கு அதிக அவகாசம் எடுக்கப் போவதில்லை. மராட்டி ராஜா, ராமநாதபுரத்துக்குப் போய் பதுங்கிக்கொள்ள முடிவு செய்திருப்பதாகச் சேதி வருகிறது. வருபவனுக்கு வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போவதா, கழட்டி எடுத்துவைத்துவிட்டுப் போவதா என்பதுதான் மிச்சமிருக்கிற சந்தேகம். நாட்டு வர்த்தமானம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குடிசனங்கள் அச்சத்திலும் பதற்றத்திலும் செய்வதறியாமல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள். தானியங்கள் பதுக்கப்படுகின்றன. … Continue reading கரையான் கதை [பூனைக்கதை டிரெய்லர் 1]